தமிழ் கிறிஸ்தவ பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்!

Monday, June 27, 2011

சத்தியம் பண்ணுவது பாவமா?

தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எடியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் சவால் விட்டபடி தனது ஆதரவாளர்களுடன் மஞ்சுநாதா சாமி முன்பு நின்று சத்தியம் செய்தார். செய்திக்கு இங்கே கிளிக்கவும். இது எடியூரப்பாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் மூலம் மஞ்சுநாதா சாமியின் மவுசு சற்று ஏறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


நான் சிறுவனாக இருக்கும் போது நான் சொன்னவற்றை உண்மை என சாதிக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது, ”சத்தியமா சொல்றேன்” , “ஒங்க அம்மா மேல சத்தியமா” என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தும் போது எனது தகப்பனார் என்னை மிகவும் கடிந்து கொள்வார். அவர் கூறும் காரணங்களெல்லாம் மத். 5:34-36 வரையிலான வசனங்களில் ’சத்தியம் பண்ண வேண்டாம்’ என சொல்லியிருப்பதைத் தான்.

வக்கீல்கள் தங்கள் வாதத் திறமையினாலும், அரசியல்வாதிகள் அடித்துப் பேசும் (உண்மையாகவே அடிப்பதுவும் தான்!)தங்கள் திறமையினாலும் உண்மை நிலையை சூழ்நிலைகளுக்கேற்றாற்போல் திரித்துக் கொள்வதுபோல் நாம் செய்யாமல், மத். 5:37ன் படி, ’உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்’ என்ற உண்மையை வலியுறுத்தவே சத்திய்ம் பண்ணவேண்டாம் என சொல்லப்படுகிறது.

மற்றபடி, ச்த்தியம் பண்ணின வரலாறு பழைய ஏற்பாடுகளிலேயே உண்டு. அவை எங்குமே குறைகூறப்பட வில்லை. ஆனால், மூன்றுமுறை மறுதலித்த பேதுரு, தன் நிலையை சாதிக்க, சத்தியம்பண்ணினது மாத்திரமல்ல, சபிக்கவும் செய்தான். இயேசு கூட தமது உபதேசங்களிடையே சில வேளைகளில், ’மெய்யாகவே மெய்யாகவே’ நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறினதுண்டு. அவர் பொய்பேசியதே இல்லை. அதுவரையிலும் பேசியவைகளை பொய் என எடுத்துக் கொண்டால் கூட, இதனை முக்கியமாக உண்மையாக எடுத்து கொள்ள வேண்டும் என்ற முக்கியம் கருதியே, அவ்விதம் அவர் கூறினார்.

என்வே, சத்தியம் பண்ணுவது சரியா தவறா என்றால், அது தேவைதானா என்பது தான் சரியான கேள்வி. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். இவ்விதம் கூறுவதற்கு, சத்தியம் பண்ண அவசியமில்லை.

Thursday, July 22, 2010

Saturday, July 10, 2010

ஜெயிக்கப் போவது யாரு? கிளியா.....? ஆக்டோபஸா.....?

.


செய்தி: ஜெயிக்கப் போவது யாரு? ஆக்டோபஸின் கணிப்பா, கிளியின் ஆரூடமா?

செய்தியை கிளிக்கி படித்து விட்டு கீழே வாசியுங்க.


கிரிக்கெட்டு சமீம காலங்களில் கெட்டுப் போய்விட்டதன் எதிரொலியாகவோ என்னமோ கால்பந்துக்கு கொஞ்சம் மவுசு ஏறியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை இப்போது கையில் போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. 19 ம் உலக கால்பந்து போட்டி முடிவுக்கு வரும் நிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டதற்கு ஒரு காரணம் இதுவரை சாம்பவன்களாயிருந்த வர்களெல்லாம் பரிதாபமாக வெளியேறி, முதல் முறையாக ஸ்பெயின் கோப்பையைத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெற்றது தான். அதிலும் பரபரப்பு கிளியா? ஆக்டோபஸா? என உலகமே டாஸ் போட்டுக் கொண்டிருப்பதுவும் தான். ஒரே நாளில் முடிவு தெரிந்துவிடத் தான் போகிறது.


ஆரூடம் ஜோஸ்யம் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கிளியும் ஆக்டோபஸும் இதுவரையிலும் குறிதவறியதே யில்லையாம். ஆனால் இப்போது இந்த இரண்டும் மோதிக் கொள்வதன் மூலம் ஏதோ ஒருவரின் வாக்கு பொய்க்கப் போவதால், இந்த நம்ம்பிக்கையுடையவர்களுக்கு இது தர்மசங்கடம்; ஊடகங்களுக்கு இது ஒரு செய்தி; ரசிகர்களுக்கு இது ஒரு கிளைமாக்ஸ்; எனக்கோ இப்படி ஒரு பதிவிட வாய்ப்பு....

இது எப்படி?


ஆரூடம்.... விஞ்ஞானமா? அல்லது அஞ்ஞானமா? .... அடுத்த பதிவில் (உலகக் கோப்பையை யார் கைப்பற்றினார் என முடிவு தெரிந்த பின்னர்).


.